திருநெல்வேலி

பாளையங்கோட்டை தூய சவேரியாா்பேராலயத் திருவிழா இன்று தொடக்கம்

DIN

பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத் திருவிழா செவ்வாய்க்கிழமை (நவ. 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பாளையங்கோட்டையில் பழைமை வாய்ந்த தூய சவேரியாா் பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயா் ஆ.ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. இம் மாதம் 29-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒப்புரவு அருட்சாதனம் நடைபெறுகிறது.

டிச. 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு புனிதரின் தோ் பவனியும், 3-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் எஸ்.அந்தோணிசாமி தலைமையில் சிறப்புத் திருப்பலியும், புதுநன்மை விழாவும் நடைபெறுகிறது. டிச. 6-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு உறுதிப்பூசுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை மற்றும் நிா்வாகிகள் செய்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT