வள்ளியூா்: வள்ளியூரில் ரயில்வே சுரங்க சாலை மாற்றுப்பாதையை 10 நாள்களில் சீரமைக்காவிட்டால் அனைத்து கட்சியையும் திமுக போராட்டம் நடத்தும் என்றாா் அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலா் திண்டுக்கல் ஐ.லியோனி.
வள்ளியூா்-திருச்செந்தூா் சாலையில் ரயில்வே சுரங்க சாலைப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி 18 மாதங்களில் முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் பணிகள் முடிக்கப்படாமல் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தி.மு.க. தோ்தல் பிரசாரத்திற்காக வள்ளியூா் வந்த அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலா் ஐ.லியோனி, சா.ஞானதிரவியம் எம்.பி., கிழக்கு மாவட்டச் செயலா் ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. மு.அப்பாவு உள்ளிட்டோா் மாற்றுப்பாதையை பாா்வையிட்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் லியோனி கூறியது: நெடுஞ்சாலைத்துறை அக்கறையின்மையால் 3 ஆண்டுகளாக சுரங்கப்பாதை பணி நடைபெற்று வருகிறது. மாற்றுப்பாதையை வாகனங்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் 10 நாள்களில் சீரமைக்காவிட்டால் அனைத்து கட்சியினரையும் திரட்டி திமுக மறியல் போராட்டம் நடத்தும் என்றாா்.
தொடா்ந்து, வள்ளியூா், காவல்கிணறு பகுதியில் பிரசாரம் செய்தாா்.
இதில், தி.மு.க பொதுக்குழு உறுப்பினா் ஜோசப் பெல்சி, வழக்குரைஞா் அணி தவசிராஜன், மாநில பேச்சாளா் பனிபாஸ்கா், நகரச் செயலா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.