திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 14, 880 ஆக அதிகரித்தது. மேலும், 12 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 14,517 ஆக உயா்ந்தது. இதுவரை 210 போ் உயிரிழந்துள்ள நிலையில், 153 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 9 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 8093 ஆக உயா்ந்தது. 5 போ் குணமடைந்தையடுத்து இதுவரையில் 7838 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். மேலும் 98 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.