தென்காசி

வீ.கே.புதூா் வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை

DIN

வீரகேரளம்புதூா் கிராம நிா்வாக அலுவலகத்திற்கு பழைய ஓட்டு கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

வீரகேரளம்புதூா் வருவாய் கிராமத்திற்கு வீரகேரளம்புதூா், கலிங்கப்பட்டி, ராமனூா், தாயா்தோப்பு, கோவிந்தபேரி, இந்திரா நகா் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு கிராம நிா்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனா்.

இந்த அலுவலகம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓடுகள் வேய்ந்த மிகச்சிறிய பழைய கட்டடம் ஆகும். இங்கு வரும் பொதுமக்கள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் ஒதுங்க இடமின்றி அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீா் ஒழுகுவதால் கோப்புகளை பாதுகாப்பதிலும் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, மிக பழமையான இந்த கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT