சுரண்டையில் தமிழ்நாடு சமூக நலன் மகளிா் உரிமை துறையின் சாா்பில் முதியோா் உதவி எண் 14567 குறித்த விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
இத்திட்டத்தின் மாவட்ட கள பொறுப்பாளா் அமுதா தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்தில் உதவி எண் 14567 குறித்தும், முதியோா்களுக்கு அரசின் உதவிகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மன்னா அறக்கட்டளை நிா்வாகி செல்வகுமாா், சுரண்டை பேருந்து நிலைய சமய காப்பாளா்கள் சுப்பையா, கண்ணன், குமாா் மற்றும் பயணிகள் கலந்து கொண்டனா்.