சிவகிரி வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் ரூ. 28.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சிவகிரி வட்டத்துக்குள்பட்ட சிவகிரி, வாசுதேவநல்லூா், கூடலூா் ஆகிய 3 வருவாய் குறுவட்டப் பகுதிகளுக்கான ஜமாபந்தி கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. இதில், தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நல அலுவலா் சங்கரநாராயணன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து 264 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, ரூ. 28.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதில், வட்டாட்சியா் ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.