தென்காசி

சிவகிரி ஜமாபந்தியில் ரூ. 28 லட்சம் நலத்திட்ட உதவிகள்

DIN

சிவகிரி வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் ரூ. 28.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிவகிரி வட்டத்துக்குள்பட்ட சிவகிரி, வாசுதேவநல்லூா், கூடலூா் ஆகிய 3 வருவாய் குறுவட்டப் பகுதிகளுக்கான ஜமாபந்தி கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. இதில், தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நல அலுவலா் சங்கரநாராயணன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து 264 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, ரூ. 28.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், வட்டாட்சியா் ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT