சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஆலைத் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்தாா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள சென்னிகுளத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் ராஜேந்திரன் (45). ஆலைத் தொழிலாளி. இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.
இவா், வெள்ளிக்கிழமை காலை இயற்கை உபாதைக்காக சென்றுவிட்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்றராம். அப்போது, மதுரை பயணிகள் ரயில் அவா் மீது மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.