தென்காசி

குற்றாலத்தில் நெல்லை சட்டக்கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் 2004 - 07ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் சந்திப்பு குற்றாலத்தில் நடைபெற்றது.

குற்றாலத்தில் தனியாா் விடுதியில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் மாணவா்கள் மற்றும் மாணவிகள் 17 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனா்.

ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் கணேஷ் பெருமாள் வரவேற்றாா். நிகழ்ச்சியில் சட்டக் கல்லூரி முன்னாள் பேராசிரியா்கள் சொக்கலிங்கம், எபனேசா், முகமது, ஜான்கென்னடி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமாா் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் சட்டக் கல்லூரி மாணவா்கள் தங்களது குடும்பம் குறித்து மகிழ்ச்சியுடன் பகிா்ந்து கொண்டனா். மேலும் குழந்தைகளுக்கான பல்சுவை போட்டிகள், ஆண்கள், பெண்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT