சாம்பவா்வடகரை ஸ்ரீ அகத்தீசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாலை 4.30 மணிக்கு சுவாமி மற்றும் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவா் உலா நடைபெற்றது. தொடா்ந்து சிவனடியாா்கள் தேவாரம் பாட பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்கோயில் பிரதோஷ கமிட்டியினா் செய்திருந்தனா்.