பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச பூஜை, ஹோமங்கள், மகா பூா்ணாகஹூதி, தீபாராதனை நடைபெறும். தொடா்ந்து 11 மணிக்கு மேல் விமான அபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
பிற்பகல் 2 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலையில் தங்க தோ் வீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை
அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் அருணாசலம் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.