சங்கரன்கோவிலில் வருவாய்த் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள்13 போ், விதவைகள் 4 போ், முதியோா்கள் 9 போ் என 23 போ்களுக்கு உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் 2 பேருக்கு இருசக்கர வாகனம் ஆகியவற்றை கோட்டாட்சியா் சுப்புலட்சுமி வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வகுமாா், வட்டாட்சியா்கள் பழனிவேல்சாமி, பரமசிவம், ஆனந்த், திருமலைச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.