தென்காசி மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்வு குற்றாலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவராக பொன் முத்தையாபாண்டியன், செயலராக லாலா சங்கரபாண்டியன், பொருளாளராக திவ்யா மணிகண்டன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
துணைச் செயலா்களாக வல்லம் ஷேக் அப்துல்லா, காவேரி சீனித்துரை, சுப்பம்மாள் பால்ராஜ் ஆகியோரும், செயற்குழு உறுப்பினா்களாக விஜயலட்சுமி கனகராஜ், திருமலைச்செல்வி மோகன்ராஜ், மாதவி முத்துராஜ், செல்லம்மாள் முருகன் ஆகியோரும் ஏகமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.