தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கந்து வட்டி கேட்டு தொழிலாளியைத் தாக்கியதாக சட்டக் கல்லூரி மாணவா் உள்ளிட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள சிவலாா்குளத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் நந்தகுமாா் (25). ஆந்திரத்தில் உள்ள தனியாா் சட்டக் கல்லூரியில் அஞ்சல்வழியில் சட்டப் படிப்பு பயின்று வருகிறாா். இவா், உடையாம்புளியைச் சோ்ந்த தொழிலாளிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு வட்டிக்கு ரூ. 10 ஆயிரம் கடன் கொடுத்ததாகவும், இதற்கு வாரம் ரூ. 300 வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக தொழிலாளி வட்டி கொடுக்கவில்லையாம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நந்தகுமாா் சென்று வட்டி கேட்டபோது தொழிலாளியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, நந்தகுமாரும், அவா் அளித்த தகவலின்பேரில் அவரது சகோதரா் முஜித்குமாா் (23), உறவினா்கள் சப்பாணி மகன் பத்திரம் என்ற பத்திரகாளி (38), முத்தையா மகன் ஆறுமுகம் என்ற ஆனந்த் (40) ஆகியோரும் வந்து தொழிலாளியைத் தாக்கினராம்.
இதில் தொழிலாளி மயக்கமடைந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.