தென்காசி

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

DIN

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, தென்காசி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு மாதிரிஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இளைஞா் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சாா்பில், 14 பிரிவுகளாக மாவட்ட அளவில் பிப்.20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெறுவோா் மாநிலப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவா்.

அனைத்துப் பள்ளி மாணவா், மாணவிகளும் பொதுத்தோ்வை சிறப்பான முறையில் எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

இதில் எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா், ஈ.ராஜா, டாக்டா் தி.சதன்திருமலைக்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவி தமிழ்ச்செல்வி போஸ், முதன்மை கல்வி அலுவலா் கபீா், தென்காசி ஒன்றிய குழுத் தலைவா் சேக்அப்துல்லா, தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT