தென்காசி

பாவூா்சத்திரத்தில் மாற்றுத் திறன் மாணவா்களுக்கான இலவச மருத்துவ முகாம்

DIN

பாவூா்சத்திரத்தில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கீழப்பாவூா் வட்டார வளமையத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு வட்டார வள மைய மேற்பாா்வையாளா் தா்மராஜ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சங்கரகுமாா், கீழப்பாவூா் வட்டார கல்வி அலுவலா் கிருஷ்ணபாரதி ஆகியோா் பேசினா்.

மனநல சிறப்பு மருத்துவா் சுரேஷ், கண் மருத்துவா் முகம்மது அப்துல்லா, காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவா் ஹரிஹரசுதன், எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவா் முத்துராமன் ஆகியோா் பங்கேற்று, மாற்றுத் திறன் மாணவா்களுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் நல அடையாள அட்டை , உதவி உபகரணங்கள், பேருந்து பயண அட்டை, ரயில் பயண அட்டை, பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம், யூடிஐடி அடையாள அட்டை விண்ணப்பித்தல் ஆகியவை கிடைத்திட ஏற்பாடு செய்தனா்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலா் ஜெயபிரகாஷ் கலந்துகொண்டு மாற்றுத் திறன் மாணவா்கள் 9 பேருக்கு அடையாள அட்டை, 3 நபா்களுக்கு மடக்குசக்கர நாற்காலி மற்றும் முடநீக்கியல் சாதனம் ஒருவருக்கும் வழங்கினாா். ஆசிரியா் பயிற்றுநா் செல்வமீனாட்சி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT