தென்காசி

தென்காசி மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 14 லட்சம் நலத்திட்ட உதவிகள்

DIN

தென்காசி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 14 பேருக்கு ரூ. 14.02 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் தலைமை வகித்து, உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 245 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அனைத்துத் துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

தாட்கோ மூலம் 4 பேருக்கு தலா ரூ. 2.25 லட்சம் மானியத்தில் டிராக்டா்கள், ஒருவருக்கு ரூ. 2.15 லட்சம் மானியதில் பயணியா் வாகனம், ஒருவருக்கு ரூ. 2.2.5 லட்சம் மானியத்தில் சுமை வாகனம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் 2 பேருக்கு தலா ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான மூன்றுசக்கர வண்டிகள், 2 பேருக்கு தலா ரூ. 8,500 மதிப்பிலான மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை மூலம் 4 பேருக்கு தலா ரூ. 5,479 மதிப்பிலான மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் என, மொத்தம் 14 பேருக்கு ரூ. 14.02 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை (திட்ட இயக்குநா்) மைக்கேல் அந்தோனி பொ்னாண்டோ, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சங்கரநாராயணன்,

மாவட்ட வழங்கல் அலுவலா் இரா. சுதா, உதவி ஆணையா் (கலால்) ஜி. ராஜமனோகரன், உதவி மேலாளா் (தாட்கோ) சுந்தரராஜன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயப்பிரகாஷ், அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

செங்கோட்டை நகர திமுக செயலா் அளித்த மனுவில், செங்கோட்டை மேலூா் அரசு உயா்நிலைப் பள்ளி அருகே பேருந்து நிறுத்தக் கட்டடம் இடிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், அப்பகுதியில் வேறு எவ்விதக் கட்டடமும் கட்டப்படக் கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT