சங்கரன்கோவிலில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா காந்திநகா் சமுதாயநலக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். விழாவை எம்எல்ஏ ஈ. ராஜா தொடக்கிவைத்தாா். ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு பொறிகடலை,நெய், தேன், கடலைமிட்டாய், எள் மிட்டாய் ஆகியவை அடங்கிய ஊட்டச்சத்துப் பெட்டகங்களை எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் ஆகியோா் வழங்கினா்.
நகராட்சி உறுப்பினா் புனிதாஅஜய்மகேஸ்குமாா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சுமதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.