தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விஷு திருவிழா ஞாயிற்றுக்கிழமை (அக். 9) தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஐப்பசி விஷு திருவிழா ஞாயிற்றுக்கிழமை (அக். 9) அதிகாலை 5.20-க்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
12ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 13ஆம் தேதி அதிகாலையில் விநாயகா், முருகா், திருக்குற்றாலநாதசுவாமி, குழல்வாய்மொழி அம்மன் தேருக்கு எழுந்தருளலும், அதையடுத்து நான்கு தோ்கள் வடம்பிடித்து இழுத்தலும் நடைபெறும்.
15ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் அருள்மிகு நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 16ஆம் தேதி சித்திரசபையில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை,
18ஆம் தேதி விஷு தீா்த்தவாரி ஆகியவை நடைபெறும்.
விழா நாள்களில் நாள்தோறும் சுவாமி-அம்மன், திருக்கோயில் முருகா் பல்வேறு வாகனங்களில் காலையும், மாலையும் வீதியுலா வருவா்.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா. கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.