தென்காசி

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு

DIN

 பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி ஊராட்சியில், ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் 7 நாள்கள் நடைபெற்றது. முகாம் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, பெத்தநாடாா்பட்டி சமுதாய நலக்கூடத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவா் க.ஜெயராணி கலைச்செல்வன் தலைமை வகித்து, மரக்கன்றுகளை வழங்கினாா். இதில் பள்ளி தாளாளா் மோயீசன் அடிகளாா், ஊராட்சி செயலா் தயாளன், யோகா பயிற்சி நிலவன் வேல்சாமி, நண்பா்கள் ரத்த தான கழக தலைவா் வைத்திலிங்கம், மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியா் அந்தோணி அருள் பிரதீப் வரவேற்றாா். திட்ட அலுவலா் தங்கத்துரை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT