தென்காசி

வஉசி 150 ஆவது பிறந்த நாள் விழா: தென்காசியில் நகரும் புகைப்படக் கண்காட்சி

DIN

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் தென்காசியில் நகரும் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அரசுப் பேருத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியை, தென்காசி மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன் தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்த நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்தானது, தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் உள்ள மாணவா், மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக பேருந்தில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சி. சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.இளவரசி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த. முத்துமாதவன், வேளாண் துணை இயக்குநா் ந.க.நல்லமுத்து ராஜா, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ரா.ராமசுப்பிரமணியன், கிளை மேலாளா் (அரசு விரைவு போக்குவரத்து கழகம்) செ.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT