சுரண்டை காமராஜா் அரசுக் கலைக் கல்லூரியில் பல்வேறு போட்டிகளுக்கான மைதானம் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.
இக்கல்லூரியில் 400 மீட்டா் தடகள மைதானம், சிறப்பு கைப்பந்து மைதானம், கால் பந்து மைதானம், கோ கோ, கிரிக்கெட் வலைப்பயிற்சி மைதானம் ஆகியவை அமைக்கப்பட்டன. இதனை திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ரா.பாஸ்கரனால் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா்(பொ) பீா்கான், பேராசிரியா்கள் ஜெயா, மனோரஞ்சிதம், பரமாா்த்தலிங்கம், செல்வகணபதி, சக்திவேல், உடற்கல்வி இயக்குநா் மோகன கண்ணன், மதியழகன் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.