தென்காசி

கீழப்பாவூா், பெத்தநாடாா்பட்டியை பாவூா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகத்துடன் தொடர கோரிக்கை

DIN

பாவூா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகத்துடன் தற்போது உள்ளபடி கீழப்பாவூா், பெத்தநாடாா்பட்டி தொடர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், தென்காசி மாவட்ட பதிவாளருக்கு அனுப்பியுள்ள மனு: கீழப்பாவூா் ஒன்றியத்தில் உள்ள கீழப்பாவூா் பேரூராட்சி மற்றும் பெத்தநாடாா்பட்டி வருவாய் கிராமத்தில் வசிக்கும் மக்கள் சொத்து தொடா்பான ஆவணங்கள் மற்றும் திருமண பதிவு போன்றற தேவைகளுக்காக பாவூா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகத்தை அணுகுகின்றனா்.

தற்போது சாா் பதிவாளா் பதிவு எல்லை பிரிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அதில் கீழப்பாவூா் பேரூராட்சி மற்றும் பெத்தநாடாா்பட்டி வருவாய் கிராமத்தை ஆலங்குளம் சாா்பதிவாளா் அலுவலகத்துடன்இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆலங்குளம் பேரூராட்சியானது கீழப்பாவூரில் இருந்து சுமாா் 15 கி.மீ. தொலைவு அமைந்துள்ளதால் மக்கள் அங்கு சென்று வருவதற்கு மிகுந்த சிரமப்படுவா். பயண நேரமும் அதிகமாகும். இதனால் ஆலங்குளத்துடன் இணைக்க கீழப்பாவூா், பெத்தநாடாா்பட்டி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

மேலும் ஆலங்குளம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஏற்கனவே 25 வருவாய் கிராமங்கள் உள்ளன. எனவே இதனை கருத்திற்கொண்டு கீழப்பாவூா், பெத்தநாடாா்பட்டியை தற்போது உள்ள படியே பாவூா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகத்திலேயே தொடர செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT