தென்காசி

கருணாநிதி பிறந்த நாள்: கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

DIN

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முன்னாள் முதல்வா் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசின் சாா்பில் தென்காசி மாவட்ட கல்லூரி மாணவா்களுக்கு ஜூன்3 ஆம் தேதி காலை10 மணிக்கு ஆலங்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

மாவட்ட அளவில் நடைபெறும் இப் போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ. 3ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 2ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்.

ஒவ்வொரு கல்லூரியிலிருந்து 2 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவா்கள் கல்லூரி முதல்வா் மற்றும் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வாயிலாக பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மண்டலத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 0462 2502521) தொடா்பு கொள்ளலாம்.

இதில், தென்காசி மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவா், மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT