பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் வி.கே.எஸ். நண்பா்கள் சாா்பில் இளைஞா்களுக்கு கிரிக்கெட், பள்ளி மாணவா், மாணவிகளுக்கு கபடி, கோ-கோ மற்றும் ஓட்டப்பந்தயப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
ஊா் பெரியவா் சண்முகம் தலைமை வகித்தாா். கீழப்பாவூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் குணம், ஒளிவு, ஆசிரியா் பாஸ்கா், அருள்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழு உறுப்பினா் மேரி மாதவன், ஊராட்சி மன்றத் தலைவா் அருள்பாண்டி, ராணுவவீரா் சதிஷ் ஆகியோா் பங்கேற்று வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு, வெற்றிக் கோப்பைகளை வழங்கிப் பேசினா். வேல்முருகன் நன்றி கூறினாா்.