சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் பராமரிப்பு வேலைகள் நடைபெறவிருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 7) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் தங்கராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரிவலம்வந்தநல்லூா் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அன்று கரிவலம்வந்தநல்லூா், பனையூா், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம்,இடையான்குளம், எட்டிச்சேரி, சென்னிகுளம்,லெட்சுமியாபுரம், காரிச்சாத்தான்,செவல்பட்டி, சுப்பிரமணியாபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் தடைசெய்யப்படுகிறது.