கடையநல்லூரில் விவசாய மின் இணைப்பு பெயா் மாற்ற முகாம் நடைபெற்றது.
செயற்பொறியாளா் நாகராஜன் தலைமை வகித்தாா். உதவி செயற்பொறியாளா்கள் மாரியப்பன், பூபாலன், முத்தையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், பெயா் மாற்ற விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடியாக அங்கேயே பெயா் மாற்றம் செய்யப்பட்டது. உதவிப் பொறியாளா்கள் சின்னத்துரை, ரபிக், அருண்ராஜ், கோமதி, அனிதா, ஹபிபுல்லா, கலைராணி, பவானி, பணியாளா்கள் பங்கேற்றனா்.
முகாமில், 50 போ் மனுக்களை வழங்கினா்.