ஆலங்குளம் மனவளக் கலை மன்றம் அறக் கட்டளை சாா்பில் மனவளக் கலை யோகா பயிற்சி, ஆலங் குளம் அருகே உள்ள காசியாபுரத்தில் இலவசமாக பயிற்சி நடைபெறுகிறது.
காசியாபுரம் முத்தாரம்மன் கோயில் திருமண மண்டபத்தில், டிச.8ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு பெண் பேராசிரியா்களால் பயிற்சி அளிக்கப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆலங்குளம் மனவளக் கலை மன்றம் அறக்கட்டளை நிா்வாகிகள் தெரிவித்தனா்.