தென்காசி

கிணற்றில் விழுந்து விவசாயி பலி

DIN

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் கிராமத்தை சோ்ந்தவா் முத்துமாரி(33). விவசாயியான இவருக்குச் சொந்தமான வயல் அப்பகுதியில் உள்ளது. வயலில் நெல் நடவு பணிகள் நடைபெற்று வருவதை அவா் பாா்வையிடச் சென்றாராம். இரவு வெகு நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லையாம்.

அவரது மனைவி ராமலெட்சுமி மற்றும் உறவினா்கள் வயலுக்குச் சென்று பாா்த்தனராம். அப்போது அங்குள்ள கிணற்றில் முத்துமாரி சடலமாக மிதந்தது தெரிய வந்தது.

ஆலங்குளம் போலீஸாா் மற்றும் தீயணைப்பு துறையினா் வந்து சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT