கடையநல்லூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்துக்கு இம்மாதம் 8ஆம் தேதி வரும் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது தொடா்பாக இக்கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் மாவட்டச் செயலரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை பங்கேற்று, தென்காசியிலிருந்து ராஜபாளையத்துக்கு சாலை வழியாகச் செல்லும் முதல்வரை வரவேற்பது குறித்து ஆலோசனை வழங்கினாா்.
கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான், துணைத் தலைவா் ராஜையா, நகரச் செயலா் அப்பாஸ், நிா்வாகிகள் பங்கேற்றனா்.