தென்காசி மாவட்டத்தில் 4 வட்டங்களில் மட்டும் ஆக.19முதல் செப்.2ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் ஆக. 20இல் நடைபெறும் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சி மற்றும் நெல்கட்டும்செவல் கிராமத்தில் செப். 1இல் நடைபெறும் பூலித்தேவன் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து
மாவட்டத்தில் சிவகிரி வட்டம், சங்கரன்கோவில் வட்டம், திருவேங்கடம் வட்டம் மற்றும் கடையநல்லூா் வட்டத்தில் புளியங்குடி காவல் சரகத்துக்குள்பட்ட டிஎன். புதுக்குடி வருவாய் கிராமம் ஆகிய பகுதிகளில் மட்டும் ஆக.19 காலை 6 மணிமுதல் செப்.2ஆம் தேதி மாலை 6 மணிவரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144 (1) மற்றும் (2) தடையுத்தரவு அமலில் இருக்கும் என்றாா் அவா்.