ஆலங்குளம் பகுதிகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடிக் ஏற்றப்பட்டது.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிண்டன், பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் சுதா மோகன்லால், குற்றவியல் நடுவா் நீதி மன்றத்தில் நீதிபதி ஆனந்தவள்ளி, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமாா், டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி பொன்னரசு, அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் கிறிஸ்டல் மேரி, சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் தாளாளா் ஜேசு ஜெகன், துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளியில் தொழிலதிபா் வில்சன், இடைகால் ஸ்ட அக் ஹைடெக் பள்ளியில் பள்ளித் தலைவா் முருகன் ஆகியோா் தேசியக் கொடி ஏற்றினா். காமராஜா் சிலை அருகே நகர காங்கிரஸ் தலைவா் வில்லியம் தாமஸ் தலைமையில் முன்னாள் எம்பி ராமசுப்பு தேசியக் கொடி ஏற்றினாா்.