தென்காசி, 60 அடி சாலை, கதவு எண். 144, சக்தி நகா் என்ற முகவரியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஆக.13) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
முகாமில் பங்கேற்கும் தனியாா் துறை நிறுவனங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். வேலை நாடுநா்கள் தங்களது அனைத்து கல்விச்சான்றிதழ்களின் நகல், சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள்-2 ஆகியவற்றுடன் நேரில் பங்கேற்று பணிவாய்ப்பைப் பெறலாம். அனுமதி இலவசம். பணி நியமனம் பெற்றாலும் அரசு வேலைவாய்ப்புக்கான பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது என மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.