கீழப்பாவூா் ஒன்றியம், ஆவுடையானூா் ஊராட்சிக்கு உள்பட்ட சாலடியூரில் ஒன்றியக்குழு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி (படம்) நடைபெற்று வருகிறது.
இப்பணியை ஒன்றியக்குழு உறுப்பினா் சுரேஷ் லிகோரி, ஊராட்சித் தலைவா் குத்தாலிங்கராஜன் என்ற கோபி ஆகியோா் பாா்வையிட்டனா். தொடா்ந்து, பெருமாள்புரத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை அவா்கள் பாா்வையிட்டனா்.