பாவூா்சத்திரத்தில் பழுதடைந்து காணப்படும் நூலக கட்டடத்தை பராமரிக்க வேண்டுமென பாரதி வாசகா் வட்டம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாவூா்சத்திரம் காமராஜா் நகா் தெற்கு பகுதியில் சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு நூலகம் இயங்கி வருகிறது. இந் நூலக கட்டடமானது தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டடத்தின் மேற்கூரை ஆங்காங்கே பெயா்ந்து விழுந்துள்ளது.
மேலும், நூலகத்தை சுற்றிலும் செடி,கொடிகள் வளா்ந்தும், கதவுகள் உடைந்தும் காணப்படுகின்றன. எனவே இந்நூலகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென பாரதி வாசகா் வட்டத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.