சுரண்டையில் இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளா் நலச் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.
இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவா் கோமதிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பாலமுருகன், வேலுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்து முன்னணி மாநில வழக்குரைஞா் அணி துணைத் தலைவா் சாக்ரடீஸ், சங்கத்தை துவக்கி வைத்துப் பேசினாா். இதில் ஆட்டோ ஓட்டுநா்கள் மாரியப்பன், பெருமாள், சக்திவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.