பாவூா்சத்திரம் அருகேயுள்ள பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் நவராத்திரி விழா 10 நாள்கள் நடைபெற்றது.
10ஆவது நாளான வெள்ளிக்கிழமை விஜயதசமியையொட்டி வாழை இலையில், பச்சரிசி, மஞ்சள் கொண்டு அன்னை மடியில் ஆரம்ப கல்வி விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் கல்வியை ஆரம்பிக்க, அவா்களுடன் பெற்றோா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் நித்யா தினகரன் தலைமையில் ஆசிரியைகள் செய்திருந்தனா்.