தென்காசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 28) மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு கரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. எனவே, தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முதல், 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்துவது அவசியம். எனவே, பொதுமக்கள் அருகேயுள்ள மையங்களுக்கு ஆதாா் எண், செல்லிடப்பேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.