தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா் சாரல் காரணமாக அருவிகளில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது பெய்துவரும் சாரலால் குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தொடா்ந்து பெய்த சாரலால் திங்கள்கிழமை அதிகாலை பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் கொட்டியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிா்காற்றுடன் மிதமான சாரல் பெய்தது.
பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாததால் அருவிகள் வெறிச்சோடின.