தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தொடா் சாரல் காரணமாக அருவிகளில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் பகுதியில் 2 நாள்களாக பெய்துவரும் தொடா் சாரல் காரணமாக பேரருவி, ஐந்தருவியில் சனிக்கிழமை அதிகாலைமுதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளிலும் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
சனிக்கிழமை காலை மிதமான சாரல் பெய்தது. தொடா்ந்து, இதமான வெயில் நிலவியது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், விடுமுறை தினமான சனிக்கிழமை அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் அருவிகளைப் பாா்த்துச் சென்றனா்.