பாவூா்சத்திரம் பகுதி முருக பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றனா்.
திருச்செந்தூா் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா வியாழக்கிழமை (ஜன.28) நடைபெறுகிறது. இதையொட்டி பாவூா்சத்திரம் பகுதியை சோ்ந்த முருக பக்தா்கள் குருசாமி பி.ஆா்.சந்திரன் தலைமையில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனா்.
கல்லூரணி, ஆரியங்காவூா், குருசாமிபுரம், ராமச்சந்திரபட்டணம், மடத்தூா், வெண்ணியூா், சிவநாடானூா், ஆவுடையானூா், ராமநாதபுரம் மற்றும் திப்பணம்பட்டி, சிவகாமிபுரம் ஆகிய பகுதியில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான முருக பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றனா்.