கடையநல்லூா்: வாசுதேவநல்லூரில், அதிமுக சாா்பில் அம்பேத்கா் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, அவரது சிலைக்கு கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட செயலருமான செ. கிருஷ்ணமுரளி, வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை முன்னாள்
உறுப்பினா் அ. மனோகரன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், முன்னாள் தொகுதிச் செயலா் பொய்கை மாரியப்பன், வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே. முருகன், வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா்கள் துரைப்பாண்டியன், மூா்த்தி பாண்டியன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.