கடையநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
கடையநல்லூா், சொக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம், காசிதா்மம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் சுமாா் 30 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.