பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை (டிச.4) நடைபெறுகிறது.
இம்முகாமினை மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைக்கிறாா். காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும் என முகாம் ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.