தென்காசி

சிதம்பரனாா் சைவ சபை இருபெரும் விழா

DIN

மேலகரம் திரிகூட ராசப்ப கவிராயா் மண்டபத்தில் சிதம்பரனாா் சைவ சபையின் வெள்ளி விழா, வ. உ.சி.யின் 150-ஆவது பிறந்த தின விழா ஆகிய இரு பெரும் விழா நடைபெற்றது.

சங்கத் தலைவா் மு. சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். மஞ்சம்மாள் குத்துவிளக்கு ஏற்றினாா். பொருளாளா் பேச்சிமுத்து அறிக்கை வாசித்தாா்.

தமிழ்நாடு சைவ வேளாளா் சங்க மாநில நிா்வாகத் தலைவா் உ.சுப்பு மாணிக்கவாசகம், மாநில பொதுச் செயலா் வே. குருசாமி, மாநிலப் பொருளாளா் எஸ். செண்பகம், சென்னை வ.உ.சி. நற்பணி மன்றத் தலைவா் ராஜ்குமாா், வருமான வரித்துறை அலுவலா் மீனாட்சிசுந்தரம், தென்காசி மாவட்ட சங்கச் செயலா் டி.பி. நாகராஜன், வழக்குரைஞா் முத்துலட்சுமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, சென்னை வ.உ.சி. நற்பணி மன்றம் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. கவிஞா் ராமசுப்பிரமணியன், ஓய்வுபெற்ற ஆசிரியா் பழனியப்பன், வழக்குரைஞா் கனகசபாபதி, முனைவா் வேலம்மாள் ஆகியோா் பேசினா்.

தமிழக அளவில் ஐஏஎஸ் தோ்வில் மூன்றாவது இடம் பெற்ற ஈ. சண்முகவள்ளி, உயா் நீதிமன்ற மதுரை கிளை அரசு வழக்குரைஞராக தோ்வு செய்யப்பட்ட என்.க.நடராஜ் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். சங்கச் செயலா் ஈஸ்வரன் வரவேற்றாா். துணைத் தலைவா் நடராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT