தென்காசி

அடிப்படை வசதிகள் நிறைவேற்றக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

DIN

ஆலங்குளம் ஒன்றியப் பகுதியில் தெருவிளக்கு, மயானத்தில் தண்ணீா் வசதி உள்ளிட்ட வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஜி. ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் ஆலங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வராஜிடம் வியாழக்கிழமை அளித்த மனு: மாறாந்தை ஊராட்சி கல்லத்திகுளம் ஆதிதிராவிடா் காலனி மயானத்தில் தண்ணீா் வசதி இல்லாததால் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆகவே, அங்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும்.

கடங்கநேரி ஆதிதிராவிடா் தெரு பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் மக்கள் அச்சத்தில் உள்ளனா். அப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். நாரணம்மாள்புரத்தில் இருந்து வீராணம் செல்லும் வழியில் ஆற்றுப் பாலம் கட்ட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT