தென்காசி

குற்றாலம் வெண்ணைமடைகுளத்தில் பேரிடா் ஒத்திகை

DIN

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை, தீ, வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ளவேண்டும் என்பது குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள வெண்ணைமடை குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குளத்தில் மூழ்கியவரை எவ்வாறு மீட்பது, படகு சவாரியின்போது தண்ணீரில் தவறி விழுபவரை எவ்வாறு மீட்பது,

வீடுகளில் கேஸ் கசிவு ஏற்பட்டால், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து ஒத்திகை செயல்விளக்கம் அளித்தனா்.திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மாவ ட்ட அலுவலா் மகாலிங்கமூா்த்தி, உதவி அலுவலா் சுரேஷ்ஆனந்த், பாளையங்கோட்டை நிலைய அலுவலா் வீரராஜ், தென்காசி நிலைய அலுவலா் ரமேஷ், காவல் ஆய்வாளா்கள் சுரேஷ், ஆடிவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT