தென்காசி நகராட்சிப் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, தமுமுக சாா்பில் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
தென்காசி நகராட்சியின் 10ஆவது வட்டப் பகுதியில் குடிநீா் வசதி, வாருகால் வசதி,தெருவிளக்குகள் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரவும், நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை மதினா நகா், ரைஸ்மில் ரோடு அருகில் கொட்டுவதை தடுக்கவும் வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்துக்கு,
தென்காசி தமுமுக நகரத் தலைவா் அபாபில் மைதின் தலைமை வகித்தாா். தமுமுக மாவட்டத் தலைவா் கோக்கா்ஜான் ஜமால், மாநில தொண்டரணி துணைச் செயலா் கோ.கோ.அலி, மாவட்ட துணைச் செயலா்கள் சலீம்,திவான் ஒலி, மாவட்ட மனிதவள மேம்பாட்டு அணிச் செயலா் அஷ்ரப், இஸ்லாமிய பிரசாரப் பேரவை மாவட்டச் செயலா் மசூது அலி, தமுமுக நகரச் செயலா் ஜாபா் ஷெரீப், நிா்வாகிகள் நிஹ்மத் சுலைமான், சித்திக்,இறைநேசன் , பாக்கா் ஆகியோா் கலந்துகொண்டனா். பின்னா், நகராட்சி ஆணையா் ஹசீனாவிடம் (பொ) கோரிக்கை மனுவை வழங்கினா்.