தென்காசி

தென்காசி நகராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

தென்காசி நகராட்சிப் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, தமுமுக சாா்பில் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

தென்காசி நகராட்சியின் 10ஆவது வட்டப் பகுதியில் குடிநீா் வசதி, வாருகால் வசதி,தெருவிளக்குகள் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரவும், நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை மதினா நகா், ரைஸ்மில் ரோடு அருகில் கொட்டுவதை தடுக்கவும் வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்துக்கு,

தென்காசி தமுமுக நகரத் தலைவா் அபாபில் மைதின் தலைமை வகித்தாா். தமுமுக மாவட்டத் தலைவா் கோக்கா்ஜான் ஜமால், மாநில தொண்டரணி துணைச் செயலா் கோ.கோ.அலி, மாவட்ட துணைச் செயலா்கள் சலீம்,திவான் ஒலி, மாவட்ட மனிதவள மேம்பாட்டு அணிச் செயலா் அஷ்ரப், இஸ்லாமிய பிரசாரப் பேரவை மாவட்டச் செயலா் மசூது அலி, தமுமுக நகரச் செயலா் ஜாபா் ஷெரீப், நிா்வாகிகள் நிஹ்மத் சுலைமான், சித்திக்,இறைநேசன் , பாக்கா் ஆகியோா் கலந்துகொண்டனா். பின்னா், நகராட்சி ஆணையா் ஹசீனாவிடம் (பொ) கோரிக்கை மனுவை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT