கடையநல்லூா் அருகேயுள்ள சமத்துவபுரத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் பெரியாா் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட அவைத் தலைவா் பெருமையாபாண்டியன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் பெரியதுரை வரவேற்றாா். பெரியாரின் சிலைக்கு திருநெல்வேலி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், மாவட்ட இணைச் செயலா் சுமதி, துணைச் செயலா் சண்முகசுந்தரம், சிறுபான்மையினா் அணிச் செயலா் கோதா்ஷா, நகரச் செயலா் கமாலுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.