சுரண்டை: சுரண்டையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் ராமராஜா தலைமை வகித்தார். நகர தலைவர் அருணாசலம் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் ராமநாதன், தென்காசியில் டிச.2ல் பாஜக சார்பில் நடைபெற உள்ள வெற்றிவேல் ரதயாத்திரை குறித்து பேசினார்.
இதில் பாஜக நிர்வாகிகள் முருகேசன், ஆறுமுகச்சாமி, பவுண்ராஜ், சிவனனைந்த பெருமாள், லிங்கம், ராமர், சேதுராமசுப்பிரமணியன், இசக்கிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.