குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை வியாழக்கிழமை (ஜூன் 1) திறக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டத்தில் முதல் பருவ சாகுபடியான கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் தமிழக முதல்வரின் ஆணையின்படி நிகழாண்டு கன்னிப்பூ சாகுபடிக்காக வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு பேச்சிப்பாறை அணை திறக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தலைமையில், தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அணையைத் திறந்து வைக்கிறாா்.